மிச்சாங் புயல்

புதுடெல்லி: தமிழகத்தில் 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிச்சாங் புயல் பாதிப்புக்காக ரூ.115.49 கோடியும், அதே மாதம் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த மழை, வெள்ள பாதிப்புக்காக ரூ.160.61 கோடியும் நிவாரணமாக மத்திய அரசு விடுவித்துள்ளது. அதேபோல் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளதாக நிவாரணம் கோரிய கர்நாடக அரசுக்கு ரூ.3,454 கோடி நிதியை மத்திய அரசு விடுவித்தது.
சென்னை: நடப்பாண்டில் வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட நான்கு விழுக்காடு அதிகம் பெய்துள்ளது.
சென்னை: கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் திருவண்ணாமலை ஆதீனம் அறக்கட்டளை சார்பில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கியுள்ளார்.
மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திரை உலகத்தினரும் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர்.
சென்னை: மிச்சாங் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலமாக ரூ.6,000 நிவாரண நிதி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.